15773. நேர்த்தியை காண கூடுமோ?

1 நேர்த்தியை காண கூடுமோ,
படைப்பில்லா கர்த்தர் ஞானமே,
படைப்பின் ஞானம் காணுமோ?
ஆண்டவர் ஆற்றல் யாவுமே.

2 அறியா ஆழம் உயரமும்,
மாளும் யாம் மாந்தர் அறிவோமோ?
வானின்று மேலும் உயரமே,
மின்னிடும் மேகம் மேலுயர்ந்தே.

3 மானுடன் வீணாய் தான் ஞானி என்றே,
எண்ணினும் தான் அற்ப விலங்கன்றோ?
மூடத்தனம் அவன் சிந்தை,
வெறும் காற்றன்றி வேறில்லை.

4 ஆண்டவர் வல்லமை யாரறிவார்,
திண்ணமாம் அவரின் வாக்குத்தத்தம்,
அவர் செய்கை யார் எதிர் சொல்வார்,
என்ன ஏதென்று யாரறிவார்.

5 உள்ளத்தின் காயங்கள் ஆற்றி அவர்,
மனப்புயல் சீற்றம் தணிப்பாரே,
துயரம் தன் கதவடைத்தால்,
யார் திறப்பார் யாரால் கூடும்.

6 நிலவும் மங்கும் சீற்றம் கண்டால்,
பகலில் சூர்யனும் இருளுமே,
அதிரும் விண்ணின் தூண்களும்,
ஆண்டவர் சொல்ல நடுங்குமே.

7 விண்ணுலகம் அவர் கைபடைப்பு,
சர்பங்களும் சிறு புழு பூச்சும்,
துன்பங்கள் தீர்ப்பார் சுவாஸத்தால்,
பெருமை கொண்டோர் மாய்ந்திடுவர்.

8 இவைகள் சில அவர் வழிகள்,
அவர் முகபாவம் யார் அறிவார்,
அவர் ஒளி முன்னே நிற்பவன் யார்?
அவர் கை மின்னல் முழக்கம்.

Text Information
First Line: நேர்த்தியை காண கூடுமோ
Title: நேர்த்தியை காண கூடுமோ?
English Title: Can creatures to perfection find
Author: Isaac Watts
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [நேர்த்தியை காண கூடுமோ]
Composer: Robert Henry Earnshaw
Key: F Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.