1 கர்த்தாவே தயைகூறுமே,
உம் கிருபை காண்பியும்,
இவ்வாதையை நீர் அகற்ற,
யாம் பாத்ரர் ஆகோமோ?
2 உம் தண்டனையும் நியாயமே,
எம் தீமைக்காய்தானே,
யாம் உணர்ந்தோம் வருந்தியே,
இத்தீங்கு நாட்களில்.
3 மரணம் மாய்தே செல்லுதே,
ஊரெங்கும் சென்றிதோ,
எண்ணுகின்றோம் யாம் மாய்ந்தோரை,
இங்கும் அங்கும் எங்கும்.
4 இல்லங்கள் தேடி வந்திதோ,
ஆம் தங்கி மாய்க்கவே,
மாண்டோர் சென்றே குழிகளில்,
ஆழ்ந்தே பாழ் ஆழியில்.
5 உள் வேதனை கவலைக்கொண்டே,
எம் நெஞ்சம் வேண்டுதே,
நீர் கிருபையால் வந்திங்கேயே,
இவ்வாதை நீக்குமே.
Source: The Cyber Hymnal #15690